பணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காமல் ATM க்கு பணம் எடுக்க செல்கிறீர்கள்....
நீங்க எது நடக்க கூடாதுன்னு நெனச்சீங்களோ அது இப்போ நடக்க போகுது ..
ஏதோ சொல்லி வச்ச மாதிரியே ஒரு பலே போக்கிரி உங்க துட்டை அடிச்சிட்டு போறதுக்காக ATM வாசலில் நிற்கிறான் .
ATM வாசலில் நீங்கள் மிதிக்கவும் உங்கள் கழுத்தில் கத்தி ...
"பணத்த எடுடா" ....திருடன் உங்களை மிரட்ட திரு திருவென்று நீங்கள் விழிக்கிறீர்கள்.
"சத்தம் போட்டா மவனே சொருகிடுவேன் பணத்தை எடுடா"
"அண்ணாச்சி நீங்க தப்பா நெனச்சிட்டீங்க நீங்க நினைக்கிறது மாதிரி நான் பணம் எடுக்க வரலை ....இது டோய்லெட் ஆக இருக்கும்ன்னு நெனச்சி சூச்சூ போறதுக்காக வந்தேன்"
"அப்படீன்னா இது எதுக்குடா கொண்டு வந்த ..." உங்கள் ATM கார்டு இப்போது அவன் கையில்
"அதிகமா வேணாம் ஒரு அம்பதாயிரம் மட்டும் எடுத்து கொடு "..கத்தி மேலும் நெருக்கமாகிறது .
இது போன்றதொரு சூழ் நிலையில் நீங்கள் மாட்டிக்கொண்டால் உங்கள் பணத்தை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த பதிவுதான் இது .
நேராக ATM ல் கார்டை செருகி PIN நம்பரை REVERSE ஆக டைப் செய்யுங்கள்.உதாரணமாக உங்கள் PIN நம்பர் 1234 என்றால் 4321 என்று டைப் செய்யுங்கள் .
அவன் கேட்ட பணம் இப்போது வந்துவிடும் .ஆனால் அவன் அறியாமலேயே அவனுக்கு இப்போது ஒரு ஆபத்து .
உடனடியாக நீங்கள் திருடனிடம் மாட்டிக்கொண்ட விஷயம் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரிய வரும் .உங்கள் பணம் மீட்கப் படுவதற்கு வாய்ப்பு ஏற்படும் .
இது எனக்கு Email மூலமாக வந்த தகவல் .
6 Comments
தலைவா அப்போ ATM PIN 2002 1111 2442 4994 etc., என்று இருந்தால் என்ன பண்றது ஈ-மெயிலில் மூலமாக பதில் சொன்னா நால்லா இருக்கும் ;-p
ReplyDeleteMy Mail--- mansoor_dynamic90@yahoo.com
தயவு செய்து போஸ்டை படித்தவுடன் அழித்துவிடவும் (இ மெயில் முகவரிக்காக)
ReplyDeleteI am using ATM for the past 15 years. Now only I know this facility. Thank you for your valuable information
ReplyDeleteI AM USING ATM CARD FOR THE PAST 15 YEARS. NOW ONLY I KNOW THIS FACILITY.
ReplyDeleteTHANK YOU FOR YOUR VALUABLE INFORMATION
nice n thanks for giving goodinfo...
ReplyDeleteithu indiakku matduma allathuulakam muluvathuma?????????????????
ReplyDelete