சென்னை உள்ளிட்ட 7 இந்திய நகரங்களில்
கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக New
World Wealth என்ற அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மகாராஷ்டிர
மாநிலம் புனேவில் அதிகபட்சமாக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த 10
ஆண்டுகளில் 60ல் இருந்து 250 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை கோடீஸ்வரர்கள்
எண்ணிக்கை 130ல் இருந்து 390 ஆக அதிகரித்துள்ளது. மிக அதிக கோடீஸ்வரர்களை
கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 500 பேருடன்
அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கு
மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளனர்.
0 Comments