மேற்கு வங்க மாநிலத்தில் சார்ஜ்
ஏறிக்கொண்டிருந்த கைப்பேசி வெடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக
பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், புருலியா
மாவட்டத்தில் உள்ள சிருடி என்கிற கிராமத்தில், 1ம் வகுப்பு படித்து வரும்
சிறுவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, அவனருகே சார்ஜ் போடப்பட்டிருந்த
கைப்பேசி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், அச்சிறுவனின்
உடலில் தீ பற்றியுள்ளது.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின்
பெற்றோர், அவனது உடலில் பற்றிய தீயை அவசர அவசரமாக தண்ணீர் ஊற்றி
அணைத்துவிட்டு, அருகிலுள்ள சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், தீக்காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் பொலிஸ் நடத்திய விசாரணையில்,
சிறுவனது உயிர் போகக் காரணமாக இருந்தது, சீனாவில் தயாரிக்கப்பட்ட மலிவு
விலை கைப்பேசி என்று தெரிய வந்துள்ளது.
0 Comments