எல்லோரும் அவர கவிதையா சொல்றாங்க,அவர் வரலாறு சொல்றாங்க....!


எல்லோரும் அவர கவிதையா சொல்றாங்க,அவர் வரலாறு சொல்றாங்க....!
அவர் போட்டோ போட்டு சொல்றாங்க...!
நான் இயல்பா பேசி சொல்றங்க....!!
முகநூல்ல,
எங்கு பார்த்தாலும் ‪#‎அப்துல்கலாம்‬ ஐயாவோட முகம்,கண்ணீர் அஞ்சலி வார்த்தைகள், டி.வி.சேனல்கள்ல அவர பற்றின பல தொகுப்புகள்...!
சரி..என அவரோட நிகழ்வுகள் கொண்ட வீடியோக்கள் ஒவ்வொண்ணா அப்லோட் பண்ணி,பார்த்துட்டே வந்தேன்...!
அவர் முகம்,
பேச்சுகள்,நாட்டின் மேல் வைத்த அக்கறை,குழந்தைகள் மேல் வைத்த பாசம்...என...,,,,,,,,
என் கண்ணில் கண்ணீர் வருவதை என்னாலயே தடுக்க முடியல...
ஒரு பேட்டியில ...அவர்கிட்ட கேட்ட கேள்வி...
,"..ஐயா...நீங்க ஒரு விஞ்ஞானி, குடியரசு தலைவர்,அறிவியல் கண்டுபிடிப்பாளர்,என பன்முகம் கொண்டிருக்கீங்க..உங்களுக்கு பிடிச்ச பணி எது...??
அதுக்கு..
அவர்....""ஆசிரியர் பணி"" ..தான் எனக்கு பிடிச்ச பணி என சொன்னார்....!
இவர் போல ஓர் ஆசிரியர் கிட்ட படிச்ச அத்தனை மாணவர்களும் வைரமா ஜொலிப்பாங்க என்பது மட்டும் நிச்சயங்க....!!
அவர் இந்த உலகத்த விட்டு உயிர் நீத்த சமயத்தில்....!
எங்கோ ஓர் இடத்தில் பிள்ளைகள் பிறந்திருப்பாங்க...!
அதில் ஏதோ ஒரு பிள்ளையா நம்மோட அப்துல்கலாம் ஐயா பிறந்திருப்பார்.....!
என நான் நம்புறேங்க...!
நன்றிங்க.....‪#‎முத்துமுத்து‬

Post a Comment

0 Comments