கணினியில் நீண்ட நேரம் வேலை
செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு விடுகிறது.
அதாவது கணினியில் வேலை செய்யும்போது கண் இமைகள் இமைப்பதற்கு குறைந்து
விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு முறை
கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.
அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில்
அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல
நிலத்தில் உள்ள பொருட்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த
நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை சுழல விட
வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து
கொள்ளவேண்டும்.
அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி
வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து
அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த
வரை தவிருங்கள்.
0 Comments